கொடுமையிலும் கொடுமை
கோரப்புல்லின் வேர்போல்
வெட்ட வெட்ட தழைக்கும்
நீ வேர் அறுக்கும் வரைக்கும்
கரை வேட்டி கட்டி
கந்துவட்டி விதையை
உரம் போட்டு வளர்க்கும்
தரம் கெட்ட மனிதம்
பிழையெனத் தெரிந்தும்
பிழைப்பு நடத்தி
ஐடை பின்னி ஆடும்
தரித்திர உலகம்
விடையார் சொல்வார்
விழிநீர் துடைத்து
தடையார் இடுவார்
மடை திறக்க முன்னே
விதியென சொல்லி
வீழ்ந்து நீ போனால்
படைத்தவன் ஏனோ
பல்லிலிக்கத்தானோ??
சட்டங்கள் இருந்தும்
திட்டங்கள் இல்லை
வட்டங்கள் போடும்
வானரத் தொல்லை
பட்டங்கள் பதவிகள்
பலருக்கு இட்டது தப்போ
நட்டத்தில் முளைத்தது
கட்டளை இடவோ
பிஞ்சுக்குழந்தைகள்
நஞ்சு அருந்திடவோ
நெஞ்சைப் பொத்தி
இனியும் வருந்திடவோ
பஞ்சுத்தளிர்மேனி தீயில்
வெந்து கருகிடவோ
வஞ்சம் விதைப்போரை
கெஞ்சி அழுதிடவோ
தஞ்சம் ஒரு பாதி
பஞ்சம் மறு மீதி
கொன்று குவிக்கிறதே
வென்று கொழுக்கிறதே
இதை கண்டும் காணாது
நண்டு நகர்வதுபோல்
முதுகுத் தண்டு இல்லாது
தாண்டிச் செல்கின்றோமே !
கோரப்புல்லின் வேர்போல்
வெட்ட வெட்ட தழைக்கும்
நீ வேர் அறுக்கும் வரைக்கும்
கரை வேட்டி கட்டி
கந்துவட்டி விதையை
உரம் போட்டு வளர்க்கும்
தரம் கெட்ட மனிதம்
பிழையெனத் தெரிந்தும்
பிழைப்பு நடத்தி
ஐடை பின்னி ஆடும்
தரித்திர உலகம்
விடையார் சொல்வார்
விழிநீர் துடைத்து
தடையார் இடுவார்
மடை திறக்க முன்னே
விதியென சொல்லி
வீழ்ந்து நீ போனால்
படைத்தவன் ஏனோ
பல்லிலிக்கத்தானோ??
சட்டங்கள் இருந்தும்
திட்டங்கள் இல்லை
வட்டங்கள் போடும்
வானரத் தொல்லை
பட்டங்கள் பதவிகள்
பலருக்கு இட்டது தப்போ
நட்டத்தில் முளைத்தது
கட்டளை இடவோ
பிஞ்சுக்குழந்தைகள்
நஞ்சு அருந்திடவோ
நெஞ்சைப் பொத்தி
இனியும் வருந்திடவோ
பஞ்சுத்தளிர்மேனி தீயில்
வெந்து கருகிடவோ
வஞ்சம் விதைப்போரை
கெஞ்சி அழுதிடவோ
தஞ்சம் ஒரு பாதி
பஞ்சம் மறு மீதி
கொன்று குவிக்கிறதே
வென்று கொழுக்கிறதே
இதை கண்டும் காணாது
நண்டு நகர்வதுபோல்
முதுகுத் தண்டு இல்லாது
தாண்டிச் செல்கின்றோமே !

No comments:
Post a Comment