சிரிப்பு வருது சிரிப்பு வருது
நினைக்க நினைக்க சிரிப்பு
வருது எதற்கு வருது ஏன்
தான் வருது எண்ணிப் பார்க்க
பிழைப்பு கெடுது
களைத்து இழைத்து மூச்சு
வருது கண்ணில் கொஞ்சம்
நீரும் வருது அதற்கா இதற்கா
ஏன் தான் வருது எதற்கு எனக்கு
மூளை சுடுது
பேசப் பேசப் வார்த்தை வருது
வந்த வார்த்தை எதனை தொடுது
சொந்த வாழ்வை அதனா தருது
நல்லாய் தானே பேச்சும் வருது
பின்ன ஏனோ சோர்வு விழுது
கொஞ்சம் கொஞ்சம் ஞானம்
வருது கொஞ்சும் நெஞ்சில்
வேசம் உறுழுது மஞ்சம் வந்தும்
வஞ்சம் வளருது நஞ்சு குடித்து
நெஞ்சு உளறுது
சொல்லச் சொல்லக் கோபம்
வருது சொல்லாவிட்டால்
ரோசம் வருது ஒன்றும் இல்லை
என்று சொன்னால் ஏந்தான் எந்தன்
மனசு அழுகுது
எழுத எழுத எல்லாம் வருது
எழுதிவிட்டால் அதுவும் தவறு
கண்ணா பின்னா கதைகள் கேட்டு
கண்டபடி தமிழும் வருது உள்ளபடி
சொல்லப் போனால் உலகை விட
உண்மை அழகு
உண்மை ஒன்று சொல்லட்டுமா
ஊமை இராகம் பாடட்டுமா நல்லாய்
வாழ்ந்தால் போதுமென்று நாதசுரம்
ஊதட்டுமா இல்லை என்று சொல்லும்
வாய்க்கு இல்லாமல் தான் போகட்டுமா
மாறும் மாறும் என்றினைத்த நிலை
மாறாக் கதை சொல்லட்டுமா
இனி மாறித் தான் வந்தாலும்
மனம் ஏறக் கதை சொல்லட்டுமா
அல்ல மாறாய் கதை சொல்லட்டுமா
ஏதோ கதை சொல்லவந்து இப்போ
நான் என்ன கதை சொல்லுகிறேன்
அட அந்தக் கதை சொல்லவந்தால்
என் சொந்தக்கதை என்பாரே அப்போ
இந்தகைதை போதும் இனி எந்தக்
கதையும் வேண்டாமே !
நினைக்க நினைக்க சிரிப்பு
வருது எதற்கு வருது ஏன்
தான் வருது எண்ணிப் பார்க்க
பிழைப்பு கெடுது
களைத்து இழைத்து மூச்சு
வருது கண்ணில் கொஞ்சம்
நீரும் வருது அதற்கா இதற்கா
ஏன் தான் வருது எதற்கு எனக்கு
மூளை சுடுது
பேசப் பேசப் வார்த்தை வருது
வந்த வார்த்தை எதனை தொடுது
சொந்த வாழ்வை அதனா தருது
நல்லாய் தானே பேச்சும் வருது
பின்ன ஏனோ சோர்வு விழுது
கொஞ்சம் கொஞ்சம் ஞானம்
வருது கொஞ்சும் நெஞ்சில்
வேசம் உறுழுது மஞ்சம் வந்தும்
வஞ்சம் வளருது நஞ்சு குடித்து
நெஞ்சு உளறுது
சொல்லச் சொல்லக் கோபம்
வருது சொல்லாவிட்டால்
ரோசம் வருது ஒன்றும் இல்லை
என்று சொன்னால் ஏந்தான் எந்தன்
மனசு அழுகுது
எழுத எழுத எல்லாம் வருது
எழுதிவிட்டால் அதுவும் தவறு
கண்ணா பின்னா கதைகள் கேட்டு
கண்டபடி தமிழும் வருது உள்ளபடி
சொல்லப் போனால் உலகை விட
உண்மை அழகு
உண்மை ஒன்று சொல்லட்டுமா
ஊமை இராகம் பாடட்டுமா நல்லாய்
வாழ்ந்தால் போதுமென்று நாதசுரம்
ஊதட்டுமா இல்லை என்று சொல்லும்
வாய்க்கு இல்லாமல் தான் போகட்டுமா
மாறும் மாறும் என்றினைத்த நிலை
மாறாக் கதை சொல்லட்டுமா
இனி மாறித் தான் வந்தாலும்
மனம் ஏறக் கதை சொல்லட்டுமா
அல்ல மாறாய் கதை சொல்லட்டுமா
ஏதோ கதை சொல்லவந்து இப்போ
நான் என்ன கதை சொல்லுகிறேன்
அட அந்தக் கதை சொல்லவந்தால்
என் சொந்தக்கதை என்பாரே அப்போ
இந்தகைதை போதும் இனி எந்தக்
கதையும் வேண்டாமே !

No comments:
Post a Comment