Monday, 12 March 2018

தேவாங்கின் தென்மாங்கில்
தேனமுதம் சிந்தக்கண்டு
பூவிலங்கு போடவந்த
செவியிழந்த நாரையொன்று
தேவாரம் பாடுதென்று
தெருப்போக்கன் செய்திகேட்டு

செருப்பணிந்த காலோடு
சேத்துக்குள்ளே நாத்துநட
பாத்திருந்த ஆட்காட்டி
அழுதழுது அடைகாக்க
நேந்து விட்ட ஆடு ஒன்று
நெஞ்சினிலே குத்திடவே

சாரைப்பாம்பு கண்கலங்கி
சருகுக்குள்ளே புகுந்ததென்று
சட்டையிலே பொத்தானில்லா
சாமக்கோழி படையலென்று
சந்தனக் குவளைக்குள்ளே
சர்ப்பம் ஒன்று உமிழ்ந்ததினால்

கர்ப்பம் தரிந்திருந்த
கவுதாரி கருக்கலைந்து
அற்ப சொற்பத்திற்கு
அடிபடிந்து போனதினால்
புத்தகத்தை மூடித்துவைத்து
ஒத்தையிலே சித்தமானான் !

No comments:

Post a Comment