பிரியத்தின் விம்பமே
பிரித்திடாத பிரியமே
இதயத்தின் உதயமே
இன்பத்தின் இமயமே
கன்னியத்தின் கவசமே
கருணையின் வடிவமே
நம்பிக்கை துருவமே
நாணயச் சிகரமே
அன்பினில் அரசியே
அழகினில் எழில் நீயே
குழவியின் குணங்களே
குமரியில் குத்துவிளக்கே
தாமரைத் தடாகமே
தங்கத்தின் தழுவலே
சித்திரச் சிங்காரமே
சிதறிய முத்தாரமே
ஓவியக் கண்காட்சியே
ஓசையில் உன் ஆட்சியே
இத்தனை கொண்டாவள்
இருளிலும் ஒளியானவள்
தன் ஆட்சி புரிபவள், என்
பட்டாம்பூச்சி ஆனவள் !

No comments:
Post a Comment