Monday, 12 March 2018

கோபப்பட்டுக் கோபப்பட்டு
இரத்தம் கொதிக்குதே,
அதை சுத்தரிக்க முன்னம்
நெஞ்சில் யுத்தம் வெடிக்குதே..

சத்தம்போட்டு சத்தம்போட்டு
சித்தம் கலையுதே, --இதை
கொக்கரிக்கும் நெஞ்சில்
ஏன்பின் பித்தம் தெளியுதே...

பத்தவைத்துப் பத்தவைத்து
பெரும் பழிசுமத்துதே,
நீ புத்தனுக்கு உறவு
என்று கொச்சைப்படுத்துதே

திட்டம் தீட்டி சட்டம் போட்டு
வண்ணக் கொடிபறக்குதே,
அதை எட்டி நின்று பார்த்த
கண்ணில் தீப்பிடிக்குதே

மொட்டத்தலையில் பட்டம் சூட்டி
மெல்லக் காய்நகற்றுதே
அங்கு வட்டம் போட்டு
குள்ளநரிகள் குடைவிரிக்குதே

நச்சுப்பாம்பு கூடி நின்று நடனமாடுதே
இதை நன்மை என்று வழிமொழிந்து
அண்ட(ங்)ம் காக்(க)கா வடைசுடுகுதே

அதையும் இதையும் சொல்லமுன்னே
தெருநாய் குரைக்குதே,
போதும் விடு வேண்டாம்
இனி வாயுளையுமே !

No comments:

Post a Comment