Monday, 12 March 2018

உருப்படியாய் ஏதும் ஒன்று
எழுதட்டுமா கவிதை என்று

வெளிப்படையாய் ஏதும் சொல்லி
நான் வாங்கட்டுமா திட்டு நன்கு

அகம் படியார் கதையில் ஒன்று
அவிழ்த்துவிடவா நானும் இன்று

விதிப்படிதான் நடக்கும் என்றால்
விழிகள் மூன்றும் எதற்கு உண்டு

பிழைப்பதற்கே வாழ்க்கை என்று
பிழை கணக்கில் வேட்கை இன்று

தடுப்பதற்கு வழிகள் இருந்தும்
கெடுப்பதற்கே நாட்டம் உண்டு

பல விலைமாதர் வெற்றிடத்தை
சில குலமாதர் நிரப்பக் கண்டு

நடனமாடும் சடலங்கள் போலே
நடமாடும் ஆடவர்களும் உண்டு

இடைக்கிடையே தடம் புரளும்
இடையிழந்த இறைவிகள் கண்டு

ஆத்தாடி ஆத்தாடி யாருக்குத் தான்
சொல்லி அழ, கூத்தாடி கூட்டத்தில்
நான் பறக்கும் காத்தாடி ஆனகதை... ?

No comments:

Post a Comment