உருப்படியாய் ஏதும் ஒன்று
எழுதட்டுமா கவிதை என்று
வெளிப்படையாய் ஏதும் சொல்லி
நான் வாங்கட்டுமா திட்டு நன்கு
அகம் படியார் கதையில் ஒன்று
அவிழ்த்துவிடவா நானும் இன்று
விதிப்படிதான் நடக்கும் என்றால்
விழிகள் மூன்றும் எதற்கு உண்டு
பிழைப்பதற்கே வாழ்க்கை என்று
பிழை கணக்கில் வேட்கை இன்று
தடுப்பதற்கு வழிகள் இருந்தும்
கெடுப்பதற்கே நாட்டம் உண்டு
பல விலைமாதர் வெற்றிடத்தை
சில குலமாதர் நிரப்பக் கண்டு
நடனமாடும் சடலங்கள் போலே
நடமாடும் ஆடவர்களும் உண்டு
இடைக்கிடையே தடம் புரளும்
இடையிழந்த இறைவிகள் கண்டு
ஆத்தாடி ஆத்தாடி யாருக்குத் தான்
சொல்லி அழ, கூத்தாடி கூட்டத்தில்
நான் பறக்கும் காத்தாடி ஆனகதை... ?
எழுதட்டுமா கவிதை என்று
வெளிப்படையாய் ஏதும் சொல்லி
நான் வாங்கட்டுமா திட்டு நன்கு
அகம் படியார் கதையில் ஒன்று
அவிழ்த்துவிடவா நானும் இன்று
விதிப்படிதான் நடக்கும் என்றால்
விழிகள் மூன்றும் எதற்கு உண்டு
பிழைப்பதற்கே வாழ்க்கை என்று
பிழை கணக்கில் வேட்கை இன்று
தடுப்பதற்கு வழிகள் இருந்தும்
கெடுப்பதற்கே நாட்டம் உண்டு
பல விலைமாதர் வெற்றிடத்தை
சில குலமாதர் நிரப்பக் கண்டு
நடனமாடும் சடலங்கள் போலே
நடமாடும் ஆடவர்களும் உண்டு
இடைக்கிடையே தடம் புரளும்
இடையிழந்த இறைவிகள் கண்டு
ஆத்தாடி ஆத்தாடி யாருக்குத் தான்
சொல்லி அழ, கூத்தாடி கூட்டத்தில்
நான் பறக்கும் காத்தாடி ஆனகதை... ?

No comments:
Post a Comment