Monday, 12 March 2018

முழுநேரத் தென்றலிலே
முழுதாய் நனைந்துவிட்டு
அரை நேர ஊதலிலே
அனைத்தும் தொலைத்ததுபோல்

அடுப்படிப் பூனையாக, என்
தவத்தினை மேற்கொண்டு
துடிப்புடன் காத்திருக்கிறேன்
தணல் ஆறும் தருணம் பார்த்து

போர்க்களத்தில் நின்றுகொண்டு
போர்வாளை இழந்தது போல்
நாற்காலியில் முக்கால் குதிரைபோல்
சவாரிசெய்யும் முடவனானேன்

நேற்று நடந்தவையும்
இன்று நடப்பவையும்
நாளை நடக்குமென்றால்
தாளில் செய்திவரும் ....!

No comments:

Post a Comment