Monday, 12 March 2018

சற்றுச் சிறு தடுமாற்றம்
ஏனோ இந்த ஒயிலாட்டம்

முற்றுபெறாத முடிவாட்டம்
மூளை சிதறுதே எதனாட்டம் ?

விற்போர் நடத்தும் உன்
விழிகண்டு அதன் முன்
நிற்போர் தான் யார் உண்டு ?

அக்காலக் கவிஞனுக்கும்
நீ முக்காலக் கனிபோல் மஞ்சு

இக்காலக் கவிஞனுக்கும்
நீ மக்காத இலவம் பஞ்சு

எக்காலக் கவிஞனுக்கும்
நீ வற்றாத நதியின் குஞ்சு !

No comments:

Post a Comment