Monday, 12 March 2018


மின்சாரக் கோழிக்குஞ்சே
நெஞ்சோரம் மேயிறியே
சம்சாரம் ஆனபின்னும்
சம்காரம் செய்யிறியே

புல் மேயாக் குட்டி மானே
வில் விழியால் தாக்கிறியே
மயில் தோகை கூந்தலாலே
மார்பில் மருதாணி பூசுறியே

மலைவாழை தண்டசைத்து
கலையாட வைக்கிறியே
தலையாட்டும் பொம்மைபோலே
நிலை மாறிச் சுற்றுறேனே

தவளை கூட தன்னிச்சையாய்
கத்துதடி, நான் தவழ்ந்து கூட
உனை தாண்டி செல்ல என்னால்
ஏன் தான் முடியல்லடி..... ?

ஏண்டி கள்ளி நோண்டி என்னை
தீண்டிப்பார்க்கிறாய் தூண்டில்
வாயில் மீனைப் போலே எனை
எதற்கு துடிக்க வைக்கிறாய்

போடி போடி பொட்டப்புள்ளை
புழைப்பைப் பாரடி, வாடி வாடி
வாழ்க்கை துணையே நானே
உந்தன் செல்ல புருசன் தானடி !

No comments:

Post a Comment