தென்றலாய் தேகத்தில்
வெண்பனி பூசினாய்
திங்களாய் வந்து நீ
மாங்கனி ஊட்டினாய்
மங்கையாய் மழலையாய்
மார்பினை வருடினாய்
மன்மதக் கலையுடன்
மாமிசம் நீட்டினாய்
கண்டதும் உண்டதும்
தொண்டையில் நிக்குதே
வென்று நான் கொண்டது
மண்டையில் சிக்குதே
குன்றினில் இல்லாத
பூக்கன்று நீ அல்லவோ
கொன்று எனை தின்ற
பசுக் கன்றும் நீ அல்லவோ
மந்திரம் தந்திரம்
கொண்டவள் நீயடி
மங்கையின் சாயலில்
மன்மதத் தேரடி !

No comments:
Post a Comment