சீர்படுத்திப் பார்த்திட முடியா
சிங்கார நிலாச் சிட்டவள்
சிணுங்கலிலும் அனுங்கலிலும்
திணரவைக்கும் கட்டுடல்
கருவிழியால் கைது செய்த
பொற்கால மொட்டவள்
செவிவழியால் கவிமொழியால்
திருவடிவாய் நின்றவள்
மறுதலித்து மனமுடைக்கா
மாயலீலை கொண்டவள்
தலையணைக்கு மடி அமைத்து
மயில் இறகு தந்தவள்
ஒர் உயிராய் என் உயிரை
ஒருங்கிணைத்து கொன்றவள்
பால் குடிக்கும் மழலையாகி
என் உயிரைக் குடித்தவள்
பகல் இரவாய் பாடு பட்டுப்
பட்டாம்பூச்சி ஆனவள்
இவள் இருக்க என்னவென்று
இலக்கணமாய் திகழ்ந்தவள்
எப்பொழுதும் இவளைபோல
ஒளிகொடுக்கத் தான் எவள் ?

No comments:
Post a Comment