என் ஆயுள் உனக்கென எழுதிக்கொடுப்பேன்
என் உயிரே நீ என உலகில் பதிப்பேன்
என் சுவாசக்காற்றிலே வீசுகின்ற மூச்சும்
உன் வரங்கள் என்றுதான் வணங்கிடுவேன்
உயிரே போகும் போதுகூட என் உறவே ...
நீ எனச் சொல்லிச் சாவேன்
என் சாவை தடுக்கும் மந்திரங்கள் உன்
மடியில் உள்ளதே என் அன்பே
எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும் உனை
மார்பில் தாங்கிட தவம் இருப்பேன்
மண்ணில் மடிந்து விழும்போதும் என்
மலரே உன் மடியில் என் உயிர் துறப்பேன்
நீயே என் உயிரடி என் எல்லாமானவளே

No comments:
Post a Comment