Thursday, 29 January 2015

எல்லாம் நன்மைக்கே எதுவும் கடந்து போகட்டும்

நாங்கள் ஒருவரை எவ்வளவு தூரம் நம்புகின்றோமோ
அந்த நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு தூரம்
அவர்களுக்கு சாதகமாக எடுத்து ஏமாற்றுகின்றார்களோ
அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை அவர்களே .........
அவர்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் , எந்த ஒருவன்...
ஒருவரை நம்பி உணர்வோடு உறவாடுகின்றானோ அவனை
அவர்கள் அவன் எதுகும் அறியான் நான் புத்திசாலி எனவும்...
எம் பேச்சை நம்பி விட்டான் என்று சந்தோசம் அடையும்
மனிதர்களே அது அவன் ஏமாறவில்லை இன்னமும் உங்கள்
மேல் முழு நம்பிக்கையோடும் அன்போடும் இருக்கிறான் என்று பொருள் ஆனால் இதை உணராது அறிவாளிபோல்
நினைத்தால் உங்களைபோல் ஒரு அறிவீலி இந்த உலகத்தில்
யாரும் இருக்க மாட்டார்கள்
முக்கியமான ஒன்றை நீங்கள் அறியவேண்டும் ஒருநாள் நீங்கள்
இதை உணர்ந்து மன்னிப்பு கேட்கவோ மனம் வருந்தியோ
அவர்களிடம் வந்து கூற நினைக்கும் போது அவர்கள் அங்கே
இல்லாமலும் போகலாம், அப்பொழுது உங்கள் கண்கலங்கும்
துடைக்க யாரும் இருக்க மாட்டார்கள் அப்பொழுது புரியும்
நம்பிக்கை என்றால் என்ன அன்பு என்றால் என்னவென்று
இவ்வளவு ஆனபின்னும் அந்த உள்ளம் எங்கிருந்தாலும் உங்களை வாழ்திட்டே இருக்கும் வலிதாங்கிய இதயத்துடனும்
கண்ணீர் ஏந்திய கண்களுடனும்..... 

No comments:

Post a Comment