Wednesday, 14 September 2016

இதற்கு மேல் நான் என்ன சொல்வேன்

தேடாமல் கிடைத்த முத்து நீ
தேவதையாய் வந்த சொத்து நீ
தேன்கவிகள் கொட்டும் மத்து நீ
தென்றலாய் தழுவும் சிந்தும் நீ


இனிமைதரும் இன்பம் நீ
இனிதான சந்தம் நீ... என்
இதயத்தின் சொந்தம் நீ..
ஈன்றெடுக்காத் தாயும் நீ


பூக்களின் சுவாசம் நீ
புன்னகை வாசம் நீ..
புல்லாங்குழலும் நீ
புல்மீது பனித்துளி நீ


காற்றிலணையா தீபம் நீ
கண்முன் நிற்கும் கடவுள் நீ
கனிகளின் சுவையும் நீ
காம த்(தீப்) பந்தமும் நீ


மாளிகை மஞ்சம் நீ
மைனாக் குஞ்சும் நீ
மஞ்சள் குங்குமம் நீ
மரகதக் கிண்ணம் நீ


இத்தனையும் நீ என்பேன்
இவைக்குள் தான் நான் என்பேன்
இதையெல்லாம் தாங்கி நிற்கும் ..
என் இனியவளே நீ என்பேன் !

No comments:

Post a Comment