Monday, 21 November 2016

சாத்திரம் இல்லா பாத்திரம்

ஆத்திரம் கொண்டு பாத்திரம் 
ஏற்றால் வார்த்தையில் கூட 
வேற்றுமை உண்டு..

ஆசைகள் என்றும் ஓசைகளாகி 
பூஜைகள் செய்தால் பாசையில்
கூட தோசங்கள் உண்டு

அதன் பாசைகளே புரியாமல் 
வேதனைகள் முளைப்பதுண்டு

அதன் தாக்கத்தை அறியாது
ஏக்கத்தில் திளைப்பதுண்டு

இதில் சாத்திரம் ஏதுமில்லை
அதைமாத்திரம் நெஞ்சில் அள்ளு

பின் பாத்திரம் என்னவென்று
திடமாத்திரம் பற்றிக்கொள்ளு.

No comments:

Post a Comment