நீ பிரம்மன் வடித்த சிற்பமடி ****
பாவட்டம் தளிரைப்போலே
பாவை உந்தன் வெட்கமடி
சேர்த்து பார்த்து ரசிக்கமுன்
கூட்டிப்போறாய் சொர்க்கமடி
புடலங்காய் கால்கள் ஊன்றி
புதையல் ஒன்று பூட்டிவைத்து
புதுமை ஒன்று செதுக்கவென்று
புறப்பட்டானோ பிரம்மனன்று ?
கண் வடித்து கனி வடித்து
கன்னத்திலே குழி வடித்து
அதை வடித்து இதை வடித்து
அங்கமெல்லாம் வடிவமைத்து
இமை வரைந்து இதழ் புனைந்து
இவற்றினுளே சுவை புதைத்து
இடை வடிக்கும் இடையினிலா
இறந்து விட்டான் பிரம்மனடி
No comments:
Post a Comment