Saturday, 5 November 2016

நீ பிரம்மன் வடித்த சிற்பமடி ****



பாவட்டம் தளிரைப்போலே 
பாவை உந்தன் வெட்கமடி 
சேர்த்து பார்த்து ரசிக்கமுன் 
கூட்டிப்போறாய் சொர்க்கமடி

புடலங்காய் கால்கள் ஊன்றி 
புதையல் ஒன்று பூட்டிவைத்து 
புதுமை ஒன்று செதுக்கவென்று 
புறப்பட்டானோ பிரம்மனன்று ?


கண் வடித்து கனி வடித்து 
கன்னத்திலே குழி வடித்து 
அதை வடித்து இதை வடித்து 
அங்கமெல்லாம் வடிவமைத்து

இமை வரைந்து இதழ் புனைந்து 
இவற்றினுளே சுவை புதைத்து 
இடை வடிக்கும் இடையினிலா 
இறந்து விட்டான் பிரம்மனடி

No comments:

Post a Comment