தேகம் தீண்டும் தென்றல் போலே
தேடி வந்த சொந்தம் நீ
தாகம் தீரும் அன்பு தந்து எனை
தாலாட்டும் தாயும் நீ
வானம் பூமி வாழ்த்தி நிற்கும்
வானவில் குட்டி நீ
காலை மாலை கவிசமைக்கும்,
என் கவிதை பூங்கா மொட்டு நீ
கண்ணில் ஒத்தி நெஞ்சில் பொத்தி
உயிர் கலந்த உயிரும் நீ
எந்த பந்தமென்றறியா வந்து
சேர்ந்த சொந்தம் நீ
பிஞ்சு பஞ்சு மொழி சிந்தி
நெஞ்சினிக்கும் குஞ்சு நீ
வஞ்சம் இல்ல நெஞ்சணையில்
எனை கைதி செய்தாய் ஏனடி.?

No comments:
Post a Comment