Wednesday, 20 July 2016

நியாயம் இல்லா வாதங்கள் ***

குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டால்
துடக்கு என்று தள்ளி நிற்கிறாய்

பசிக்கு கெஞ்சி சோறு கேட்டால்
சொடக்கு போட்டு தள்ளி வைக்கிறாய்

குழப்பம் கொள்ள விளக்கம் கேட்டால்
பழக்க வழக்கம் என்று தர்க்கம் செய்கிறாய்

சடலம் ஆன பின்னுமா மண்ணில்
நீ வீண் கலகம் மூட்டிப் போகணும்

படலை தாண்டி சுடலை போனால்நீயோ
சாம்பலாய் கடல் நீரில் தானே கரைகின்றாய்.!

No comments:

Post a Comment