Monday, 21 November 2016

தீபம் ஏற்றும் தீண்டாமை*****


கட்டித் தொழுதும் கடவுளை 
பின் கண்களில் எதற்கிந்த 
நீர்த்துளி  

புதுப்பட்டுத் துணிகளை 
சாத்தியும் பட்டினி தீர்ந்தாதா 
வாழ்வினில் 

குட்டிக் கரணங்கள் போட்டும் 
ஏன் குற்றங்கள் குறைவில்லை 
நாட்டினில்

திட்டித்திட்டிதான் வாழ்கின்றாய்
பின் தீண்டாமை தீபத்தை ஏனோ
ஏற்றுறாய்

கட்டித்தழுவித் தான் வாழ்ந்துபார்
பின் உனை துட்டு வணங்கித்தான்
வாழ்த்துவார்

No comments:

Post a Comment