Monday, 21 November 2016

விளப்பரம் தேடும் பிரபலம்****


நியாயம் என்பார் நீதியென்பார்
 நால் திசையும் மோசமென்பார் 
நல்லது கெட்டது நான் சொல்ல
 நீ கொஞ்சம் கேளென்பார்

நடத்தையிலே விளப்பரத்தை 
நல்லபடி விதைத்திடுவார் 
நாட்டுக்கு நலமென்று 
நாகூசா நயத்தோடு நடித்திருவார்

காவோலை குருத்தோலை
 கதையெல்லாம் பேசிடுவார் 
கண்மூடிக் கவித்துவமாய்
 கருத்துக்கள் உரைத்திடுவார்

வரலாறு தெரியாமல் வசைபாடி 
வலை வீசிக் கவி வடிப்பார்,.
நாம் வழியின்றி தடுமாறி தவித்திட
வகுத்தோரை வழிகாட்டியென்றிடுவார்

No comments:

Post a Comment