Saturday, 17 September 2016

உன் முகவரி என்ன முழுமதி ? ****

குக்குறுப்பாச்சான் குடும்பத்திற்கும்
உனக்கும் என்னடி சம்மந்தம்..
இப்படி அக்குவேறு ஆணிவேறாய்

என் நெஞ்சை கொத்திக் கிழிக்கிறியே
நான் அக்கறையோடு கேட்கின்றேன்
ஏன் இப்படி மோசம்....

எங்கே உந்தன் சந்நிதி அங்கே
சென்று கேட்கின்றேன் எந்தன்
அத்தையிடம் எனக்கொரு நீதி.

கிடைத்தால் மறுகணமே கட்டிடுவேன்
உன் கழுத்தில் தாலி மறுத்தால்
மறு கணமே உடுத்திடுவேன் காவி


No comments:

Post a Comment