ஊத்தை பொடியன்டா நீ
ஊத்தை பொடியன்டா நீ
என்று சாட்டுப் போக்கா
சேட்டை பண்ணுறாளே
நாரத்தங்காய் கன்னம் மின்ன
ஊமத்தங்காய் நெஞ்சை அள்ள
ஏலக்காய் வாசம்கொண்டு முந்திரி
மூக்காலே மந்திரிச்சு போறாளே
வெண்டைக்காய் விரலழகி
விழி வித்தைக் கண்ணழகி
முல்லைப்பூ பல்லழகி, என்
முன்னாடி நீ உலகழகி
ஆலம்பழ உதட்டாலே
அச்சடிக்க பார்ப்பவளே,
அச்சடிக்க முன்னாலே
பொச்சடிக்க வைப்பவளே
தந்தைக்கு உபதேசம் செய்த
தகப்பன் சுவாமி போல், எனை
நங்கைக்கு நயமுரைக்கும்
நாயகனாக்கியவளே
உச்சாரம் ஏற்றிவிட்டு அச்சாரம்
கேட்பவளே, பெரும் செய்கூலி
எனக்கெதற்கு,. சிறு சேதாரம்
தான் உனக்கிருக்கு
உள்ளத்தினுள் ஏதோ ஒன்று
உருக்குலைந்து கிடக்குதடி
உள்ளுக்குள்ளே நீபுகுந்து பரிகாரம்
செய்யேனடி பரியாரி நீயாகி..!!!

No comments:
Post a Comment