Thursday, 16 June 2016

வாசம் வீசும் பாசமலர்கள்

    யாரோ யாரோ யார் தானோ
     இவர்கள் எனக்கு யார்தானோ
     மகிடம் சூட்டப் பாடுபடும் இரு
     மலர்கள் வாசம் எனக்கேனோ

    ஏனோ ஏனோ ஏன் தானோ, எனை
     இமைபோல் காக்கும் இவை யாரோ
     என் எண்ண அலையில் நீந்துவதை
     எடுத்துக் கொடுக்கும் இவர் யாரோ

    நானே நானே நீ என்பேன், நமக்குள்
     ஏதோ உறவெண்பேன். நீயும் நானும்
     வேறென்றும் இதுவா அதுவா என்றலும் 
     நம் நினைப்பில் ஏதோ ஒன்றென்பேன்

    இது சரியா சரியா நீ சொல்லு நம் சரிவை
     பார்த்திட பலர் உண்டு, இதுவே ஒருநாள்
     அதுவாகும் அதுவும் ஒருநாள் இதுவாகும்
     அப்போ சரித்திரம் படைப்பது நிஜமாகும் !

No comments:

Post a Comment