மேனி வெந்து சிவந்திட்ட பெண்டிளாள்
உன் நெஞ்சு குளிந்ததா என்னினால்
பஞ்சு மிளிர்கின்றா கூந்தாளாள்..என்
மஞ்சம் மலர்ந்ததே உன்னினால்
கருவண்டு தவழ்ந்திடும் கண்ணிளாள்
உனை கண்டு மகிழ்கிறேன் காளை நான்
தொண்டு புரிகின்ற சொண்டிளாள்
உனை உண்டு மயங்கிய வண்டு நான்
முட்டி நெகிழ்ந்திடும் செம்புடையாள்
எனை கட்டி இழுத்துடும் தும்பிடையாள்
வெட்டி விழுத்திடும் தண்டுடையாள்
சுளை பொத்தி ஒழித்திட்ட தேனடையாள்
எனை குத்தி சாய்த்திடும் கூர்விழியாள்
என் புத்தி மரிக்கிதே தேன்மொழியால்
முத்தி நிலைதனை நானடைய....எனை
பற்றிக் கொள்ளேண்டி பாலகனாய்.....!!!

No comments:
Post a Comment