Wednesday, 14 September 2016

கவிதை சொல்லும் கண்ணீர் !

கூறிய வார்த்தைகள் கூரிய
வாளென நெஞ்சிலே பாய்ந்ததே
பாவி என் கண்ணிகளில் மேவிய
நீர்த்துளி ஆறென ஓடுதே

ஏளனமான அந்நிலை கண்டதும்
என் மனம் வெம்முதே
ஓவியம் வரையமுன் தூரிகை
உடைந்து கைதனை கிழித்ததே

வேதனை போக்கிட பாவனை
செய்தது கொடும் காவியமானதே
தனிமையை தகர்த்திட தருணத்தில்
எய்தது விரகதாபத்தில் விழுந்ததே

சாமியின் கணக்கென்று சட்டென்று
சொன்னது பொட்டென்று நீத்ததே
நட்பிலும் கற்பிலும் மின்னிய நாணயம்
தேய்ந்து இன்று நிர்கதியானதே !

No comments:

Post a Comment