Thursday, 16 June 2016

புடவை கட்டிய கண்ணிவெடி நீயடி



கொட்டுப்பூச்சி கட்டிலிலே
 மெட்டிபோட்டுத் தூங்குதே
 கட்டுப்பாட்டை நானிழந்து 
 வட்டமிட்டு ஆடுறேன்

பட்டாம்பூச்சி கண்ணெதிரில்
 சட்டை போட்டு சுற்றுதே 
 பார்த்த கண்கள் காலையிலே
 கண்ணிவெடியானதே

சிட்டுக்குருவி பொட்டு வைத்து
 புடவை கட்டி நடக்குதே
 கட்டெறும்பு நெஞ்சுக்குள்ளே 
 பட்டாசு போடுதே 

குட்டி நிலா கால் முளைத்து
 ஸ்கூட்டியிலே போகுதே
 எனை மறந்து மதிமயங்கி என்
 வேஷ்டி காற்றில் பறக்குதே.

No comments:

Post a Comment