Saturday, 5 November 2016

நிலை புரியா நிலமை***



பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில்
உருக்குலைந்தாடும் சருகுகள்போல் 
கரை தொட அலைகின்றோமே

அதன் நிலை தன்னை அறியாது 
கரைவந்து சேரமுன் குலையோடு அள்ளிட
 விலையென்ன என்கிறோமே

தெரியா மேடையில் புரியாத பாசையில்
சதிராடும் கூட்டம் நாமே, இங்கு சரித்திரம் கூட 
தரித்திரம் என்று சான்றிதழ் உள்ளதாமே!

No comments:

Post a Comment