Thursday, 16 June 2016

மெய் சொல்லும் கண்ணாடி

    மெய்யான வாழ்க்கையை
     பொய்யாக வாழ்கின்றோம்
     பொய்யான வாழ்க்கையை
     மெய்யாகப் பார்க்கின்றோம்

    கண்ணுக்கு முன்னாடி தானே
     பலகதை பேசி நடிக்கின்றோம்
     கண்ணாடி முன்னாடி தினம்
     தலை கூனி நிற்கின்றோம்..

    மனசாட்சி இல்லாமல் நாம்
     பலசாட்சி சொல்கின்றோம்
     பழிவந்து சேர்ந்து விட்டால்
     குருபெயர்ச்சி என்கின்றோம்

    இதற்கு வருந்தாத உருவங்கள்
     எதற்கும் திருந்தாத உள்ளங்கள்
     பிறந்தென்ன லாபம், இவைகள்
     இருந்தாலே பெரும் சாபம்...!!!

No comments:

Post a Comment