இன்று எனக்காக எழுதுகிறேன்
அன்பே உனக்கென ஒரு கவிதை
கனத்த உள்ளத்தில் களைபறிக்க
வந்தவன் நான், களைபறிக்கமுன்
எனைக் களவாடிச் சென்றவள்...நீ
மண்வாசப் பேச்சினாலே தன் வசம்
கொண்டவளே பெண் நாணம் என்ன
என்று விண்ணாணம் புரிந்தவளே
தன்மானம் தடுக்கவில்லை எனக்கு
தலைகுனிவாய் நினைக்கவில்லை உன்
சொல்வாளால் கிழித்தபோதும்
தத்தை உந்தன் மெத்தையிலே நான்
தனியிடமும் கேட்கவில்லை அத்தை
மகன் நீயென்று அரவணை போதுமடி
அக்கினியை ஏவி எனை நீ பஸ்பமாய்
எரித்தாலும் காற்றோடு கலந்து வந்து
உன் காலடியில் நான் விழுவேனடி !

No comments:
Post a Comment