அப்புறம் நடந்ததை எவரிடம் சொல்வேன்
முப்பெரும் தேவிகள் முழுவதும் இவளோ
முப்பெரும்தேவியே இவளில்த்தான் உருவோ
ஒப்பனை வெள்ளத்தில் உறைந்தது
என் உயிரோ செப்பிட முன்னே சிவந்தது ஏன் இதழோ
கத்தரிவெயிலில் கருகிய மலர்போல்
கட்டிலில் கிடந்தும் நான் கானலில் குளித்தேன்
சட்டென்று வந்தவள் முத்தங்கள் பொழிந்திட
யுத்தங்களின்றியே இரத்தங்கள் கசிந்தன
முத்திரை பதித்தவள் முகத்திரை கிழிக்கமுன்
பித்தங்கள் தெளிந்திட நித்திரை கலைந்தது !

No comments:
Post a Comment