கோபப்பட்டுக் கோபப்பட்டு இரத்தம் கொதிக்குதே,
அதை சுத்தரிக்க முன்னம்
நெஞ்சில் யுத்தம் வெடிக்குதே..
சத்தம்போட்டு சத்தம்போட்டு சித்தம் கலையுதே,
இதை கொக்கரிக்கும் நெஞ்சில்
ஏன்பின் பித்தம் தெளியுதே...
பத்தவைத்துப் பத்தவைத்து பழிசுமத்துதே,
நீ புத்தனுக்கு உறவு
என்று பச்சைகுத்துதே
திட்டம் தீட்டி சட்டம் போட்டு கொடிபறக்குதே,
அதை எட்டி நின்று பார்த்த
கண்ணில் தீப்பிடிக்குதே
மொட்டத்தலையில் பட்டம் சூட்டி காய்நகற்றுதே
அங்கு வட்டம் போட்டு
குள்ளநரிகள் கூட்டம் குடைவிரிக்குதே
கச்சைகூட நமக்கின்று பிச்சையானதே
அதையும் சில கொச்சைப்படுத்தி
முச்சைகட்டி காற்றில் ஏவுதே
நச்சுப்பாம்பு கூடி நின்று நடனமாடுதே
இதை நன்மை என்று வழிமொழிந்து
அண்டம் காக்(க)கா வடைசுடுகுதே
மிச்சம் சொச்சம் சொல்லமுன்னே
தெருநாய் குரைக்குதே,
போதும் விடு வேண்டாம் இனி வாயுளையுமே !

No comments:
Post a Comment