Tuesday, 11 October 2016

நிகழ்காலம் ஒன்றே நிஜம்

தடுக்கி விழுந்த தருணத்தில்
தாங்கிப் பிடிக்கும் பூங்கொடியே
இறக்கை எதுவும் உனக்கில்லை
இருந்தும் ஏந்திப் பறக்கிறியே



கடந்த காலம் நினைவில் இல்லை
எனக்கு எதிர்காலம் தேவையில்லை
நிகழ்காலம் ஒன்றே நிஜம் என்பேன்
மெல்லினமே என்னருகே நீயிருந்தால்.


அழகான வர்ணங்கள் அமையாத
வேளையிலும், உந்தன் அன்பான
ஆர்ப்பரிப்பில் நிலைகொள்ளும்
சமயத்தில் இதமான வண்ணங்களே !

No comments:

Post a Comment