Thursday, 26 May 2016

கலகலக்கும் நிலையறியாப் பரபரப்பு

தலைகுனியும் நிலை எதற்கு
தமிழினமே நீ விளக்கு

மதி மயங்கி மதுக்கடையில்
கிடப்பதுவா உன் பிழைப்பு
...

நடந்து செல்லும் வழியெல்லாம்
நரிகளின் வலை விரிப்பு

நாட்டுக்குள்ளே காட்டுக்கோழி
கூடி நின்று கலகலப்பு

மாட்டுக்காரன் தோட்டத்திலே
பாட்டுப்பாட ஏன் மறுப்பு

சாட்டு சொல்லும் கூட்டத்துக்கு
வீட்டுக்குள்ளே வரவேற்பு

கூட்டுக்குள்ளே வாழும் உனக்கு
எதற்கு இந்தப் பரபரப்பு..?




No comments:

Post a Comment