நீ யார் எனக்கு நான் யார் உனக்கு
ஆனால் நமகுள் ஏதோ இருக்கு
ஏன் தான் இந்தத் தீராக் கணக்கு
யார்தான் வந்து சொல்வார் எமக்கு
நான் என்பதும் நான் இல்லை
நீ என்பதும் நீ இல்லை, ஆனால்
நானாய் நீயும் நீயாய் நானும்
நாமாயிணைந்து ஒன்றாயிருக்கு
நீதான் எனக்கு நான் தான் உனக்கு
இதுதான் என்று எழுத்து இருக்கு
எது தான் என்று நாமும் உணர
அது தான் இந்த காலக் கணக்கு !

No comments:
Post a Comment