Saturday, 5 November 2016

எப்பிறப்பிலும் என்னவளாய் ****


முற்பிறப்பில் என் துணையாய்
இப்பிறப்பின் என் உயிராய், 
ஏன் எப்பிறப்பிலும் என்ன(அ)வளாய் 
நீ பிறக்க வேண்டுமடி

உன் அருகே நான் இருந்து 
உனக்காக வாழ்ந்திடுவேன் 
என் எதிரே நீ இருந்து, 
உந்தன் காட்சி தரவேண்டுமடி


பைந்தமிழே என் பகல் நிலவே
 பாலைவனத்து பனித்துளியே 
சேலை உடுத்த திரவியமே,.
என் மாலை வேளை மல்லிகையே

நாவினிக்கும் நாயகியே 
நள்ளிரவின் சொப்பனமே
தென்றலே திருவடியே 
திகட்டாதசெம்மொழியே
உன் வாசம் எந்தன் சுவாசமடி !

No comments:

Post a Comment