Sunday, 10 July 2016

சுவாசத்தில் நுழைந்த குட்டித்தென்றல் ***



தவம் ஏதும் இருக்கவில்லை
தரணி எங்கும் தேடவில்லை
தானாகத் தேடிவந்து, என்னை
தழுவுதே ஒரு குட்டித்தென்றல்

யாரோ யாரோ நீ யாரோ ...
என் யாவிலும் கலந்தது நீ தானோ
யன்னல்வழி வந்த வசந்தமோ
யமுனை உந்தன் சொந்தமோ

மானாக துள்ளும் மங்கையோ
மயிலாக ஆடும் நங்கையோ
மலர்வாசம் வீசும் பூவையோ
மனசை அள்ளும் பாவையோ

செடியில் பூக்காத செம்பூவே
செதுக்கி எடுக்கா பெண்சிலையே
செந்தமிழ் சிந்தும் தேனமுதே
செந்தாழம் பூவின் வடிவழகே

என் மஞ்சம் உந்தன் மடிதானடி
என் தஞ்சம் உந்தன் நிழல்தானடி
என் நெஞ்சம் உந்தன் வசம் தானடி
என் சுவாசக் காற்றே நீ தானடி..!


No comments:

Post a Comment