Saturday, 5 November 2016

வெட்கத்தில் பூத்த வியர்வை


யாதும் யாதும் யாதாயினும்
நீயும் நானும் ஒன்றாயினோம்

வானும் மண்ணும் மன்றாடினும்
நானும் நீயும் கொண்டாடினோம்

மேலும் கீழும் திண்டாடினும்
பூவின் தேனை உண்டாடினோம்

நாணம் வெட்கம் கண்ணாயினும்
வியர்வை பூக்க கண்மூடினோம்

காதல் காமம் இரண்டாயினும்
கூடிக் குலவி பண்பாடினோம்

விழிகள் மொழியில் துண்டாடுதே
விடியும் வரைக்குள் என்னாகுவோம் ?

No comments:

Post a Comment