Tuesday, 7 April 2015

மனிதன் புரியாத புதிரா ?


பயத்தின் பொருளை மனமறியும்
இடத்தின் பயனை பயிரறியும்
நீரின் எடையை குடமறியும்
நிலத்தின் வகை மழையறியும்
குளத்தின் பெருமை கொக்கறியும்...
பூவின் தேனை வண்டறியும்
புல்லின் பசுமை பசுவறியும்
பாலின் சுவையை நாவறியும்
கனிந்த பழத்தை கிளியறியும்
தென்றல் சுகத்தை கொடியறியும்
மனிதா உன்னை யார் அறிவார்
மரணம் ஒன்றே தானறியும்..!!!

No comments:

Post a Comment