Tuesday, 7 April 2015

நன்றி சொல்ல வார்த்தை இல்லை


இதுவே என்னுடைய ஐநூறாவது
ஆக்கம்
இதற்கெல்லாம் காரணம் உங்கள்
ஊக்கம்
தக்கவைப்பது எப்படியென்பதே என் ...
ஏக்கம்
உலகில் இருக்கின்றதோ எந்தனையோ
தாக்கம்
அதையெல்லாம் வெளிக்காட்டுவதே என்
வழக்கம்
நன்றி என்று விலகினிற்பதில்லை என்
பழக்கம்
உங்களெல்லோர் மனங்களையும்
குளிரவைத்து
சந்தோசப்படுத்துவதே என்றும் என்
நோக்கம் !

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் கடமைப்
பட்டுள்ளேன், என் எல்லா ஆக்கங்களுக்கும் உங்கள்
அன்பையும் வாழ்த்துக்களையும் அள்ளி வீசி என்னை
இவ்வளவு அரவணைப்போடு பாராட்டும் என் உறவுகள்
அனைவரையும் என் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் !

வாழ்க வளமுடன் அன்பே சிவம்..!!!
 

No comments:

Post a Comment