Tuesday, 7 April 2015

யார் கொடுத்த உரிமை இது


உனக்கொரு நியதி எனக்கொரு நியதி
என்று ஒருபோதும் வகுத்ததில்லை
தலைக்கனம் பிடித்தவன் தனித்துவம்
பெற்றதாய் சரித்திரம் எதுவுமில்லை
இலக்கணப் பிழையோடு இலக்கியம்...
படைத்திட இறுமாப்புக் கொள்கின்றாய்
பிறக்கின்ற போதே இறக்கின்ற கணக்கினை
ஏட்டிலே எழுதுகின்றாய்............................
நடக்கின்ற போதிலே கடக்கின்ற உயிரினை
துடக்கென்று சொல்லுகின்றாய்................
கிடக்கின்ற இடத்திலே படக்கென்று போகின்ற
மனிதா ஏன் துள்ளுகின்றாய் ........................???
 

No comments:

Post a Comment