Tuesday, 7 April 2015

அதிர்ச்சியிலும் ஆனந்தமே







அன்பே நான் உனக்கு அதிர்ச்சியான விசயம் சொல்வேன்
அதை நீயோ ஆனந்தாமாகவே எடுத்துக் கொள்ளணும்
சேர்த்துவைத்த கனவெல்லாம் மிச்சமின்றி தீர்த்திடணும்
மெத்தையிலே நாம் இருந்தும் நித்திரையை மறந்திடணும்
பொத்தி வைத்த ஆசைகளை  சொச்சமின்றிப் பேசிடணும்
உத்தரவு இல்லாமல் நான் பல யுத்தங்கள் புரிந்திடணும்
சத்தங்கள் ஏதுமின்றி நீயோ மொத்தததையும் தாங்கிடணும்
வண்டாக நான் மாறிக் கொண்டாடித் தேன் குடிக்க,
 நீயோ திண்டாட்டம் போடாமல் என் பொண்டாட்டியாகிடணும்
பூமியிலே இருந்தும் நாம் சொர்க்கத்தை தொட்டிடணும்
இத்தனையும் கூறுவதால் சிறிதேனும் அதி்ர்ச்சி உண்டோ
வெக்கத்தை நீ விட்டு  பக்கத்தில் தான்வந்து கூறடி என்சகியே ? 

No comments:

Post a Comment