பெண்ணை மலர் என்றான் கம்பன்
கண்ணை மீன்னென்றான்கவிஞன்
இதழில் குளிர் என்றான் இளைஞன்
உதட்டில் சுவை கண்டான் ரசிகன்
இடையை கொடி என்றான் சிற்பி
மலரில் வாசம் இருக்கும்
பெண்ணில்
வேஷம் இருக்கும்
இதழில் மணம் வீசும்
கண்ணில் வாள் வீசும்
இடைகள் வசைபாடும் அதுவே விஷமாகும்
உதட்டில் தேன்சிந்தும் அதுவே உன்னைக்
கொல்லும்.
ஆழ்கடலின் ஆழத்தை ஆராட்சி கண்டிடலாம்
அன்னமெனும் பெண் மனதை
ஆராய்ந்து
கண்டவர் யார்
இதற்கு விடை அறிந்தவனே இந்தலோக
இறைவனென்பேன்.......!

No comments:
Post a Comment