Tuesday, 7 April 2015

அணில் குஞ்சும் அத்தை மகளும்

மாம்பழத்தை அணில் கொந்த
மாமி அதைத் துரத்த
கொக்கரித்துக் கோழி ஒன்று
தெத்தித் தெத்தி ஒடயிலே
அத்தை மகள் ஒத்தையிலே...
முத்தம்தனை கூட்டயிலே
ஒட்டுப்போட்ட பாவாடை
விட்டு விட்டு ஆடயிலே
இத்தனையும் போதுமடா
எனக்கு எந்த சொத்துச்சுகமும்
வேண்டாமென்றேன்
நித்திரையில் மாமன் எழுப்பி
பட்ட பாட்டை சொன்ன போது
மொட்டு விட்டு பூத்த நெஞ்சம்
ஐயஹோ பட்ட மரம் ஆனதடா 

No comments:

Post a Comment