Tuesday, 7 April 2015

இதயத்தில் கோலம் போட வா


பெண்ணே நீ பூமுடித்து புன்னகையோடு
வருவாயென நான் காத்திருந்தேன்
ஆனால் நீயோ விளக்குமாற்றுடன்
வருகின்றாய் விளங்கவில்லையே..!
...
ஓ ஓ . நான் உனக்காக என் இதயத்தில்
கட்டிவைத்திருக்கும் காதல் கோட்டை
தூசி பிடித்திருப்பதால் சுத்தம் செய்து
நீ குடியிருக்கவா................ ??

அப்போ நான் ஓடிப்போய் கோலமாவு
வாங்கிவரவா வாசல் தெளித்து கோலம்
போட்டுவிடு அலங்கோலமாக இருந்த
என் இதயம் மங்களகரமாகட்டும்.....!!!
 

No comments:

Post a Comment