Tuesday, 7 April 2015

புன்னகைத்தால் முத்துதிரும்


அன்பே நீ ஆலையம் சென்றால்
அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு
அமைதியாக திரும்பி வந்துவிடு
அங்கே புன்னகைத்து விடாதே
அப்புறம் சாமிக்குற்றமாகிவிடும்...
என்ன அதிர்ச்சியாக உள்ளதா
ஆமாம் உன் சிரிப்பில் உதிரும்
முத்துக்கள் சிதறல் கண்டு அந்த
முத்துமாரி அம்மனே நேரில் வந்து
காட்சி தருவதாக எண்ணி உனை
கைகூப்பி வணங்கிடப்போகின்றார்கள் !
 

No comments:

Post a Comment