Tuesday, 7 April 2015

உழைப்பவனுக்கு உணவில்லை

விதைத்தவன் அறுப்பதில்லை
அறுப்பவன் விதைத்ததில்லை
முளைத்தவை விளைந்தபோதும்
வளர்த்தவன் உண்பதில்லை
உனக்கென வகுத்த போதும்...
தடையின்றி கிடைப்பதில்லை
உழுதவன் உரமாகின்றான்
உண்பவன் மரமாகின்றான்
எடுப்பவன் கல்லாகின்றான்
கொடுப்பவன் மண்ணாகின்றான்
இங்கே உழைத்தவன் என்னானான்
என்று எவருமே வருந்தவில்லை.!!!

No comments:

Post a Comment