வான் அலையில் நீந்தி வந்தாள்
மீனாக
மின் வலையில் பிடித்தேன் நான்
துள்ளினாள் மானாக
கொஞ்சம் தள்ளி வைத்து பார்த்தேன்
துடித்தாள் புழுவாக
அள்ளி எடுத்தேன் கையில் அவளை
மெல்லப் பூவாக
கட்டி அணைத்து தொட்டு ருசித்தேன்
வண்டாக
எட்டிப் பிடித்தேன் முட்டிச் சிவந்து பட்டு
சுவைத்தாள் தேனாக
கட்டில் அமர்ந்து மொட்டு விரிந்து கொட்டி
கிடந்தாள் முத்தாக
அலறி எழுந்தேன் எல்லாம் கனவாக
ஐயோ ஐயோ
இது என்ன... பொய்யோ.... பொய்யோ..
தவித்தேன் துடித்தேன் தனியாக ......... !

No comments:
Post a Comment