Monday, 30 March 2015

சொர்ப்பனத்தில் தேன் சுவை

வான் அலையில் நீந்தி வந்தாள்
 மீனாக 
 மின் வலையில் பிடித்தேன் நான்
 துள்ளினாள் மானாக
 கொஞ்சம் தள்ளி வைத்து பார்த்தேன்
துடித்தாள் புழுவாக
 அள்ளி எடுத்தேன் கையில் அவளை
 மெல்லப் பூவாக
 கட்டி அணைத்து தொட்டு ருசித்தேன்
 வண்டாக
 எட்டிப் பிடித்தேன் முட்டிச் சிவந்து பட்டு
 சுவைத்தாள் தேனாக
 கட்டில் அமர்ந்து மொட்டு விரிந்து கொட்டி
 கிடந்தாள் முத்தாக
 அலறி எழுந்தேன் எல்லாம் கனவாக 
 ஐயோ ஐயோ 
 இது என்ன... பொய்யோ.... பொய்யோ.. 
தவித்தேன் துடித்தேன் தனியாக ......... ! 

No comments:

Post a Comment