Monday, 30 March 2015

விசித்திரமான பாத்திரங்கள்


பத்திரமாக இருந்த பாண்டவர்கள் வாழ்வுக்கு
சூழ்ச்சி எனும் சித்திரம் வரைந்தான் சகுனி
அஸ்திரம் களைந்தாள் பாஞ்சாலி என்று அவள்
வஸ்திரம் களைய துடிந்தான் துரியோதனன்
உத்தமனாக இருந்தும் வித்தகனான போதும்...
மித்திரனாக மட்டும் நடந்து கொண்டான் கர்ணன்
மன்னனாக பிறந்தும் தர்மவழி நடந்தும் தனது
மனைவியையும் இழந்து நின்றான் தர்மன்
இச்செயல் அனைத்தும் உணர்ந்தும் எச்செயல்
வெல்லும் என தெரிந்தும் ஏன் கண்ணைமூடிச்
சந்தமின்றிச் சிரித்தான் (கிருஷ்ணன்) கண்ணன் ???
 

No comments:

Post a Comment