Monday, 30 March 2015

வேடிக்கையும் வேஷமும் அபிஷேகம் செய்யுது


கயவர்கள் கையிலே கலியுகம்
கண்மூடித் தூங்காதே மானிடம்
காணாமல் போயிடும் கோவணம்
உண்மையை கொல்லுது சாஸ்திரம்
பேய்களின் வாயிலே மந்திரம்...
சாமியின் சாட்டிலே உற்சவம்
சாமத்தில் நடக்குது தினம் தினம்
வேடிக்கை பார்க்குது ஒரு இனம்
வேஷம் தான் போடுது மறுதினம்
அபிஷேகம் செய்கிறாய் சாமிக்கு
அதிசயம் நடக்குதா பூமிக்கு.......
புரிந்தும் நீ நடிக்கிறாய் ஊருக்கு
பூக்கட்டிப் பார்க்கிறாய் வாழ்வுக்கு
வெள்ளைப்பூ வந்தால் தான் சுபிட்சமா
வேடிக்கை காட்டுறாய் வெளிச்சமா
சாவினைத் தடுக்குமா உன் சாமி
சாத்தியம் என்றாலே நீ ஆசாமி.. !!!
 

No comments:

Post a Comment