Monday, 30 March 2015

போனது கசக்கட்டும் வருவது இனிக்கட்டும்


மனம் தடம் புரளும் போது இடம் கொடுக்காதே
உன் வட்டத்தை விட்டு என்றும் நீ விலகாதே
யடம் போலிருக்கும் முடம் என்று திட்டினாலும்
மனம் தளராதே குணம் மாறாதே
உனை விட்டு விலகி விடைபெறுவோருக்கு தடை...
போடாதே உன் கவலைகள் எல்லாம் சேமித்து
சடை போட்டுப் பூவைத்துக் குடை பிடிக்காதே
மடை திறந்து ஓடும் அருவிபோல் நீராட்டி உனை
தாலாட்டிப் பாலுட்ட கொடைவள்ளல் போல் மனம்
படைத்தவள் ஒருத்தி வருவாள் கலங்காதே............!
 

No comments:

Post a Comment